அப்பா .
அன்னையெனும்
அதிசயக்
கரம் பிடிப்பார் !
அங்கே
ஆண்மை எனும்
அற்புத
விதை விதைப்பார் !
அறுவடை
தான் பார்த்து
ஆகாயம்
மேல் குதிப்பார் !
யானை என்றும்
சிறு குதிரை என்றும்
வீட்டிற்குள்
பிள்ளை பொதி சுமப்பார் !
நடை வண்டி
நான் பிடித்து
நான்கு எட்டு வைகயிலே
இரை தேடும்
இயந்திரம் ஆவார் !
மூங்கிலும்
இவரும்
ஒன்றுதான்
வலி மேவி
துளை தாவி
உதடுகள் தீண்டும்போது
புல்லாங்குழல் ஆகிறார் !
அப்பாவெனும்
ஆலம் விழுதாகிறார் !

