என் ஆசை மச்சான் .

ஈச்சமர சோலைக்குள்ள
இதயம் வாடுற என் ஆசை மச்சான் !

ஆத்துக்காரி இங்கிருக்க
ஒத்தையில அங்க வாடுரதென்ன ?

நேத்து வச்ச மீன்குழம்பும்
நெய்மணக்கும் முருங்களையும்
நேரத்துக்கு சாப்பிட்டிங்க
உங்க தாரத்துக்கும் ஊட்டினீங்க !

ஆத்தங்கரை காத்து வாங்கி
ஆறு ஏழு தம்மடிச்சு
நேரத்தோட தூங்க்கினீங்க
ராகம் சொல்லி பாடினீங்க !

நாடுவிட்டு நாடு போயி
காஞ்சு போன ரொட்டியில
வெண்ணைபூசி தின்னுரீங்க
நெஞ்சு வெம்பி வேதும்புரீங்க !

இராப் பகலா உழைக்கிறீங்க
பின்பு
தூக்கம் கெட்டு அலையிறீங்க !

சுட்டெரிக்கும் சுடும் வெயிலில்
சுக்கு வத்தல் ஆனவரே ...

குளிர் பனிக் காலத்துல
போரவைக்குள்ளாகிபோரவரே ...

மீசைவச்ச என் பாச மச்சான்
நாட்டுக்கு நீங்க வாரதெப்போ ?

நாலுபுள்ள நாம பெத்து
நாட்டுக்கு நன்மை செய்வதெப்போ ?

பாலைவன பூமியில நீங்க
பட்ட பாடு போதும் மச்சான் !

நாட்டுக்கு வார வேலைகள
சீக்கிரமா பாரு மச்சான் !

எழுதியவர் : பிரகாசக்கவி - (17-Sep-13, 1:22 am)
சேர்த்தது : prahasakkavi anwer
பார்வை : 173

மேலே