+காணவில்லையே நேற்றோடு...+
செல்லை காணவில்லையே நேற்றோடு
எங்கு விழுந்துவிட்டதோ ரோட்டோடு
நானும் தேடிப்பார்க்கிறேன் மண்ணோடு
====================செல்லே செல்லே
நான் செல்லில்லாதவன் தெரியாதா
செல்லும் விலைஉயர்ந்தது புரியாதா
செல்லை பார்த்ததெவரென அறீவீரோ
================சொல்லே சொல்லே
செல்லை வாங்கி ஆனதோ இருமாதம்
எங்கு விட்டுப்போனதோ வெகுதூரம்
..................................
செல்லை பார்த்திருந்தேனே கண்ணாக
என்றும் இணைந்திருப்போமே ஒன்றாக
இன்று எங்குபோனதோ வேறாக
================செல்லே செல்லே
செல்லைப் பிரிந்ததால் தவிக்கின்றேன்
ஒருசொல்லை இழந்ததாய் துடிக்கின்றேன்
உண்மையாய் கண்ணீர் வடிக்கின்றேன்
================சொல்லே சொல்லே
செல்லை எடுத்துச்சென்றவா நீவாழ்க!
உனக்கு மகிழ்ச்சிதந்ததால் மகிழ்வேனே!