காலமே ...ஓடி வா!

எங்கிருந்தோ எப்படியோ
மின்னலாய் வந்து
என் கண்களை தாக்கிச்சென்ற
அப்பின்னலை எண்ணி,எண்ணி
என்னை பித்தனாகிய
காதலை துறக்க - காலமே
உன் கருணை தேவை,
அது மட்டுமே தேவை!

உறங்க்கிகிடந்த என் உள்ளத்தை தட்டிஎழுப்பி
கை பிடித்து கூடி சென்று
"காதல்" சிறையுள்தள்ளி பூட்டிவிட்டு
சாவியையும் தொலைதுவிட்டுச்சென்ற
அந்த தொலைதூர வானவில்லின்
வேடிக்கை சித்ரவதையிலிரிந்து விடுபட
காலமே - உன் கருணை தேவை,
அது மட்டுமே தேவை!

அந்த புதிய பெட்டகம்
என் இதயஉறைக்குள் இட்டுச்சென்றது
"காமம்" என்ற துருபிடிக்கும் பொருளையல்ல;
"காதல்" என்ற புதுப்பொருளை!

அப்புதுப்பொருளோ...
புதுப்புது வழிகளில் கனவுகளாய்
தொடர்ந்து வந்து என்னை கரைக்கிறது !

அக்கனவுகளால் காலத்தை தள்ளித்தள்ளி
கடைசியாய் எச்சமானது நினைவுகள் மட்டுமே!
அந்த நினைவுகளால் வடிகட்டிவடிகட்டி
நின்றுபோய் மிச்சமானது துன்பங்கள் மட்டுமே!

இத்துன்பதின் துயர்துடைக்க
போர்கால நடவடிக்கையாய்
புறப்பட்டுவாராயோ காலமே ...
வந்து உன் கரத்தால் என்னை கரையேற்றமாட்டாயோ?...

விரைவாக நீவர மறந்துவிட்டால்
வித்தியாச காட்சிகளை கண்டிடுவாய்!

அடித்துச்சொல்லிதந்த அட்சரத்தையே
அடிக்கடி சொல்லும் கிளிப்பிள்ளைபோல்
அடிக்காமல் சொல்லிச்சென்ற
பெண்ணவளின் பெயரைமட்டுமே
உச்சரித்துக்கொண்டிருப்பேன் -
ஓர் மானிட கிளியாய் மாறியிருந்து!
அல்லது
கையில் கிடைத்ததினால்
மூளையில் வந்ததைக்கொண்டு கிறுக்கிஎழுதி
தோல்விக்கவிதைகள் என சொல்லி பிறரை
தொடர்ந்து கஷ்டப்படுத்திகொண்டிருப்பேன்!

இவை எதுவும் இல்லைஎன்றால்...
உண்ணமறந்து கன்னமும்,வயிறும்ஒட்டியிருக்கும்
வெட்டமறந்து தலையும்,தாடியும்நீண்டுயிருக்கும்.
எனது உண்மை உருவம் மறைந்து
ஓர் பித்தனின் மொத்தமாய்
என் உடல் மாறியிருக்கும்!

ஆகவே - காலமே
இந்நிலையை தொடரவிடாமல்
உடனே ஓடிவந்து உதவி செய் !
எனக்கு மட்டுமல்ல ...
என்னைப்போன்ற
"முட்டாள் காதல்" கைதிகளுக்கும்!

எழுதியவர் : அருள் ராம் (3-Oct-13, 11:56 am)
சேர்த்தது : arul ram
பார்வை : 67

மேலே