முத்து நகை
காலையில் எழுந்து வீடு வேலைகளை அவசர அவசரமாக பார்த்து கொன்டிருந்தாள் அபிராமி. சீக்கிரமாக வேலைகளை முடித்து அதன் பிறகு அலுவலகம் செல்ல வேண்டும்
"அப்பா நான் ஆபீஸ் போயிட்டு வரேன்" - அப்பா விடம் கூறினாள். "பாத்து போயிட்டு வாமா காலம் கேட்டு கெடக்கு" - அனுசரணையாக எச்சரிக்கை கூறினார் அவளின் தந்தை சுகுமாரன்.
"சித்தி,,,, சித்தி நான்.... ஆபீஸ் போறேன் "- அவளின் குரலில் எப்போதும் தெரியும் பயம் இருந்தது
"அதுதான் தெனமும் போறியே அப்புறமென்ன போ"- என்ற கடுகடுப்பான வார்த்தைகள் வந்தது அவளின் சித்தியிடம் . இது அபிராமிக்கு பழக்கபட்ட ஒன்று தான்.
அபிராமின் தந்தை ஒரு மில்லில் வேலை செய்தார். அபிராமியின் தாய் அவள் பிறந்தவுடனே இறந்துவிட்டாள். எனவே சுகுமாரன் இன்னோர் திருமணம் செய்துகொண்டார்.
முதல் தாரத்தின் குழந்தை என்பதே அபிராமிக்கு அவள் சித்தி மரகதம் கொடுத்த பட்டம். அவளுக்கும் இரு பெண் குழந்தை பிறந்தது. மதுமதி,மலர்விழி. அது முதல் அபிராமி அவளின் சித்திக்கு ஒரு எதிரி போலவே தெரிந்தாள்.
ஆனால் அபிராமியோ அவளை தன் தாயாகவே மதித்தாள். அவள் செய்த அத்துணை கொடுமைகளையும் பொறுத்து கொண்டாள்.
மதுமதி அபிராமியின் தங்கை(சித்தியின் மகள்). இவளை அபிராமி தன் கூட பிறந்த தங்கையாகவே நினைத்தாள். அவளும் அபிராமி மீது பாசமாக தான் இருந்தாள்.ஆனால் மலர்விழி
அப்படியே அவளின் தாயின் குணம் மதுமதிக்கு படிப்பு சுத்தமாக ஏறவில்லை எனவே படிப்பை +2 வோடு நிறுத்தினாள்.
ஆனால் அபிராமி படிப்பில் கெட்டிக்காரி. அவள் கல்லூரி சேர வேண்டும் என்றபோது அவள் சித்தி முதலில் மறுத்தால் பிறகு ஒப்புகொண்டாள்.(உள் நோக்கத்தோடுதான் )
இன்று கல்லூரி படிப்பு முடிந்து அபிராமி ஒரு வேளையிலும் சேர்ந்துவிட்டாள்.
அவள் வேலைக்கு செல்வதால் அவளுக்கு வீட்டில் மரியாதை ஒன்றும் கூடவில்லை. எப்போதும் போலவே வீடு வேலைகள் அவள் தலைமீதே...........................
"அவள ஏன் இப்டி கரிச்சி கொட்டுற நம்ம குடும்பத்துக்காகத்தான அவ வேலைக்கு போறா. கொஞ்சம் அன்பாத்தான் பேசுனா என்ன"- தன் மகள் மீதுள்ள பாசத்தால் சுகுமாரன் மரகதத்தை கேட்டார்.
"ஆமா பேச வந்துடாரு பெருசா குடும்பத்துக்காக போறலாம் குடும்பத்துக்காக என் தம்பி மட்டும் படிக்க வைக்காட்டி எப்படி அவ இப்டி சீவி சிங்காரிசிகிட்டு வேலைக்கு போவா"- பொரிந்து தள்ளினால் மரகதம்.
"அதுக்கு தான் அவள மாடவிட கேவலம் வேலை வாங்குறியே அப்புறம் என்ன"-என்று தன் ஆதங்கத்தை கோபமாக வெளிக்காட்டினர்.
"ஓஹோ அவ்வளவு கோவபடுரவரு தான் வேலைக்கு போய் குடும்பத்த காப்பத்தனும் ஒன்னுக்கு ரெண்டு கல்யாணம் பண்ணா மட்டும் போதுமா கை வெலன்காதப்பையே நீ இவ்ளோ பேசுறியா போயா போ போயி ஒரு மூலைல உக்காரு வந்துட்டாரு பேசுறததுக்கு"- தன் ஊனத்தை குறை கூறி பேசியபின் அவளிடம் எப்படி பேசுவது என்ற எண்ணத்துடனும் கண்ணீருடனும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். ஆம் சில மாதங்களுக்கு முன்பு அவர் வேலை செய்து வந்த மில்லில் ஏற்பட்ட விபத்தில் அவரின் கை செயலிழந்தது.
வாசலில் அமர்ந்து தன் ஊனமா கையை பார்த்து கொண்டிருந்தார் "நீ மட்டும் அந்த விபத்துக்கு பலியாகாம இருந்திருந்த இப்ப அவ பேசுன பேச்சிக்கு அவள வகுந்திருப்பேன்" மனதிற்கும் ஓடியது.
அப்போது "என்ன மாமா வாசல்ல உக்கந்திருக்கிங்க"-என்றபடி வந்தான் கண்ணன்.
மரகதத்தின் தம்பி அபிராமியை படிக்க வைத்தவன் இவனின் வற்புறுத்தலால் தான் அபிராமி கல்லூரியில் சேர்க்க பட்டாள் இவனே அவள் படிப்பு முடியும் வரை எல்லா செலவுகளையும் செய்தான். மரகதத்தில் குணம் இவனிடம் எள் அளவும் கிடையாது நல்ல குணம் படைத்தவன் சுகுமாருக்கு இவனை மிகவும் பிடிக்கும் இவனையே அபிராமிக்கு திருமணம் முடிக்கலாம் என்று மனதில் ஒரு எண்ணம் வைத்திருந்தார். அதையும் சுக்கு நூறாக்கி விட்டாள் மரகதம். மலர்விழிக்கு தான் கண்ணனை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறிவிட்டாள்."இவனுக்கு மட்டும் அபிராமிய கட்டிவச்சிட்டா அவ சந்தோசமா இருப்பாளே "...........
"என்ன மாமா நான் கேட்டதுக்கு பதில சொல்லாம என்னமோ யோசிச்சிட்டு இருக்கீங்க"
"ங்அ ஒன்னும் இல்ல தம்பி சும்மா காத்து வாங்கலாம்னுதான். நீ எப்டி இருக்க முன்ன மாதிரி நீ அடிக்கடி வீட்டுக்கு வரதில்லையே. உன் வேலைலாம் எப்டி இருக்கு தம்பி"
"நல்ல இருக்கு மாமா கொஞ்சம் ஜாஸ்தியா மெடிரியல் வந்துருக்கு அதான் வீட்டுக்கு வரமுடில .சரி அக்கா எங்க மாமா"
"உள்ள தான் இருக்க போய் பாரு" -என்றார்
"அக்கா... என்ன அக்கா ரொம்ப பிசியா இருக்க போல "
"வாடா தம்பி. உனக்கு எப்போதுமே கிண்டல் தான். சரி சரி உக்காரு. மது மாமாக்கு ஒரு காப்பி கொண்டு வாமா" என்றாள் கனிவுடன் இதை ஒருநாளும் அவள் அபிராமியிடம் காட்டியதில்லை என்பது கண்ணனுக்கு தெரியும் .
"என்ன அக்கா ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு வர சொன்ன "
"அது ஒன்னும் இல்ல டா நம்ம மதுக்கு மாப்பள பாத்துருக்கேன் பையன் கொஞ்சம் பெரிய இடம் சீர் கொஞ்சம் அதிகமா எதிர் பாக்குறாங்க. அதன் உன்கிட்ட கலந்துக்கலாம்னு......." என்றாள்.
"ஏன் அக்கா அபிராமி இருக்கும்போது மதுக்கு கல்யாணம் பண்றது சரியா" என்றான் கண்ணன்.
"அட அவள பத்தி யோசிக்காம இருப்பேனா டா அவகிட கேட்டேன் அவ இப்ப கல்யாணம் வேண்டான்னு சொல்லிட்டா அவ விருப்பத்த நான் ஏன் கெடுக்கணும் என் வயித்துல பொறந்த பொண்ண இருந்த அடிச்சிகூட பண்ணிவைக்கலாம்" என்றாள் பெருமூச்சோடு ..........
இதில் துளிகூட உண்மை இல்லை என்பது கண்ணனுக்கும் தெரியும். வாசலில் இருந்த சுகுமாரனுக்கு எரிச்சலாக வந்தது.
"ஐயோ பாவி எப்டி புளுகுற என் பொண்ண கடைசி வரைக்கும் கர எத்த மாட்டா போல இருக்கே பண பிசாசு இவள கல்யாணம் பண்ணதுக்கு எனக்கு தண்டன கெடச்சாக்கூட பரவாஇல்ல என் பொண்ணோட வாழ்க்கையே போய்டும் போல இருக்கே" என்று ஒரு தந்தைக்கே உரிய கவலையோடு புலம்பினர்.
"சரி அக்கா உன் இஷ்டபடி செய் நான் கல்யாணத்துக்கு என்ன செய்யணும்னு கொஞ்சம் முன்னாடியே சொல்லிடு அப்பதான் பணம் பொரட்ட சரியா இருக்கும்"
"அட நீ ஏன் டா செய்யணும் அதன் ஒரு பைசா சீர் வாங்காம மலர கல்யாணம் பண்ணிக்க போறியே அது போதாதா "
"அப்டி இல்ல அக்கா பையன் பெரிய இடம்னு சொல்ற அவங்க வசதிக்கி அதிகமா எதிர்பாக்குரங்கனு சொல்ற நான் செய்யாம எப்டி அக்கா"
"அத பத்தி நீயேன் கவலை படுற அதெல்லாம் அபிராமி பத்துகுறேனு சொல்லிட்டா. அது மட்டும் இல்ல கண்ணன் மாமாட்ட ஏதும் வாங்க கூடாதுன்னு எனக்கு கண்டிஷன் போட்டுருக்கா அவ தங்கச்சி கல்யாணத்துக்கு எல்லாம் அவளே தான் செய்யணுமாம்"என்றாள் பொய்யான ஒரு சிரிப்புடன்.............
"சரி அக்கா நான் கெளம்புறேன் ஏதும் தேவைப்பட்டா அபிய என்கிட்டே தயங்காம கேட்க சொல்லு" என்று கிளம்பினான் கண்ணன் மேலும் அவன் அக்கா சொல்லும் பொய்களை தாங்க மாட்டாமல்........
வாசலில் இருந்த தன் மாமாவை ஒரு நிமிடம் நின்று பார்த்தான் அந்த பார்வையில் "அபிராமிக்காக திருமணம் என்ற பெயரில் அவளையே பலிக்குடுத்துடிங்களே மாமா" என்பது போல இருந்தது சுகுமாரனுக்கு........
"நான் வரேன் மாமா" என்றான்.
"சுகுமாரன் ஏதும் பேசாமல் அமர்ந்திருந்தார் அவன் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தவராய்....
திருமணம் நிச்சயம் ஆனது எல்லா செலவுகளும் அபிராமி தலையில் ....
அபிராமியும் ஆபீஸ் லோன், நண்பர்களிடம் கடன் என்று எங்கெங்கோ அலைந்து பாதி பணம் சேர்த்து விட்டால்....
மீதி பணத்திற்கு என்ன செய்வது என்று புரியாமல் தவித்து கொண்டிருந்தாள்.
"என்னடி என்ன செலவு நெறைய இருக்கு இன்னும் பணம் ரெடி பண்ணாம இருக்க உன் தங்கச்சி கல்யாணம் நடக்குறது உனக்கு புடிக்கலையா அதன் இப்டி பண்றியா என் பொண்ணு நல்ல வாழப்போறது உன் கண்ண கரிக்குது டி அதன் இன்னும் ஏற்பாடு பண்ணாம இருக்க " என்று காலையில் ஏகத்திற்கும் திட்டி தீர்த்தால் சித்தி. அவளை அடக்க அப்பா முயற்சித்தும் "பெத்த பொண்ணு கல்யாணத்துக்கு கால் காசு கொடுக்க வக்கில்ல வந்துட்டாரு பேச" எண்டு வசை கேட்க நேர்ந்தது
வழக்கம் போல ஒரு பொம்மையை போல எல்லாவற்றையும் கேட்ட அபிராமி அவள் தந்தைக்கு கிடைத்த வசை மொழிகளால் மிகவும் அவதியுற்றால்
"எல்லாம் என்னால தான் அப்பா பொறந்த ஒடனே அம்மாவை இழந்துட்டேன் பிஞ்சி வயசுல எனக்கு கெடைக்க வேண்டிய அன்ப இழந்துட்டேன் . எனக்கு வாழ்க்கையே வேண்டாம் அப்பா என்னால தான் இப்ப நீங்க இந்த வார்த்தையெல்லாம்..........." அவளின் அழுகை அணை கடந்தது.
"இல்ல மா இதெல்லாம் என்னோட தப்பு தான் நான் தான்மா உன் வாழ்க்கையே கெடுத்துட்டேன்" ஆறுதல் சொல்ல ஆளில்லாமல் யாருக்கு யார் ஆறுதல் சொல்வதென்று தெரியமால் கண்ணீராலே தங்களின் நிலையை கடந்தனர் இருவரும் .
மறுநாள் அபிராமி கண்ணனை பார்க்க சென்றாள்.
"மாமா.............. மாமா........." -கண்ணன் தாய் தந்தை இல்லாதவன் ஆனால் ஒழுக்கமாக வாழ்பவன். தன் அக்காவிடம் சிக்கி தவிக்கும் அபிராமி மீது என்று அவனுக்கு பரிதாபமும் அன்பும் உண்டு .
"வா அபி...... என்ன இவ்ளோ தூரம் என்ன கூப்டிருந்தா நானே ஆபீஸ் வந்துருபேனே"
"இல்ல மாமா இந்த விஷயம் ஆபீஸ்ல பேச முடியாது அதான் .........."
"சரி சொல்லு என்ன விஷயம் "
"மாமா அது வந்து ......."
"அட சொல்லு அபி "
"மாமா நீங்க இது வரைக்கும் எனக்கு நெறைய ஹெல்ப் பண்ணிருகிங்க. இப்போ மது கல்யாணத்துக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுது ...... அது ..." அதற்கு மேல் அவளால் ஏதும் கேட்க முடிய வில்லை அவள் கேட்காமலே அதிகமா உதவியவன் அவன்.
"அட இதுக்கு ஏன்மா தயங்குற சரி இவ்ளோ வேணும்"
" ஒரு 20000 ரூபா தேவைப்படுது"
"சரிமா நீ ஒன்னு பண்ணு மதியம் நான் வேல செய்ற ஆபீஸ்க்கு வா நான் ஏற்பாடு பண்ணி வக்கிறேன்"-என்றான்
"ரொம்ப தேங்க்ஸ் மாமா" என்றான் கண்ணிருடன்
"அட இது என்ன புதுசா தேங்க்ஸ்லாம் எனக்கு அதெல்லாம் வேணாம் மா" என்றான் கிண்டலாக.
" சரி நான் கெளம்புறேன் மாமா "என்றாள் புன்னகைத்தவாறே
"எங்க ஆபீஸ் தான போற வா நான் கொண்டு போய் விடுறேன்" என்றான்
ஆனால் அபிராமி தயங்கினால் ஏற்கனவே ஒரு முறை கல்லூரிக்கு அவனுடன் ஒன்றாக போய் சித்தியிடம் நன்றாக வாங்கி கட்டி கொண்டால்
"என்ன அக்கா பத்தி யோசிக்கிறியா அது விட வா நான் கொண்டுபோய் விடுறேன்"
மனதில் பயம் இருந்தாலும் அவன் அழைப்பை தவிர்க்க முடியாமல் அவனோடு சென்றாள்
"கடவுளே இது என் சித்திக்கு மட்டும் தெரியவே கூடாது" என்ற வேண்டுதலோடு...........
ஆபீஸ் வேலையை முடித்து மதியம் லீவ் போட்டால் நேரே கண்ணன் ஆபீஸ்க்கு போனால்
அங்கே இருக்கும் வாட்ச்மன் "ஏன் மா யார பாக்கணும்" என்றார்.
"கண்ணன் எலேக்ட்ரோனிக் சூப்பர்வைசர் "
"ஓ அந்த தம்பியா இருமா வர சொல்றேன்" என்று உள்ளே சென்றார். சிறிது நேரத்தில் கண்ணன் வந்தான் கையில் பணத்துடன்
"இந்த அபி பாத்து பத்தரமா எடுத்துட்டு போ "
"ரொம்ப தேங்க்ஸ் மாமா"
"மறுபடியும் முதலேந்தா.............!!!!!!"
இருவரும் சிரித்தார்கள் . "அபி நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும் கான்டீன் போலாமா" என்றான்
கான்டீன், சூடாக சாப்பாடு தயாராக இருந்தது
"என்ன சாப்டுற அபி எங்க கான்டீன் சாப்பாடு சூப்பரா இருக்கும் "
"எனக்கு ஏதும் வேண்டாம் மாமா டீ மட்டும் சொல்லுங்க நிறைய வேல இருக்கு மாமா கல்யாணத்துக்கு இனி தன் அதெல்லாம் பாக்கணும்"
"வேல வேலன்னு சாப்டாம இருந்த எப்டி மனுஷன் உழைக்குறதே சாப்பாட்டுக்கு தான் தெரிஞ்சிக்கோ" என்றான் பிறகு சைவ சாப்பாடு சாப்பிட்டனர். பிறகு கண்ணன் மெல்ல பேச்சை ஆரம்பித்தான்
"அபி... நான் ஒன்னு கேக்கலாமா உன்கிட்ட"
"கேளுங்க மாமா "
" நீ ஏன் கல்யாணம் வேணாங்குற. கால காலத்துல நீயும் கல்யாணம் பண்ணா தானம்மா நிம்மதியா வாழ முடியும் "
"நான் அப்படி சொல்லலையே மாமா "என்றாள் வெகுளியாக பின் அவளுக்கு புரிந்தது தன் சித்தி அப்படி சொல்லிருக்கிறாள் என்று
"மாமா நான் கல்யாணத்துக்கெல்லாம் ஆசை படல மாமா வேண்டாம் மாமா எனக்கு கல்யாணமே வேண்டாம்" என்றாள் கண்ணிருடன்
"அழாதமா அழாத எல்லாம் சரியாயிடும்" என்றான்
"நான் கெளம்புறேன் மாமா "என்று விடை பெற்று கொண்டாள்,
கண்ணன் அவள் போவதையே பார்த்து கொண்டிருந்தான் ஒரு முடிவு எடுத்தவனாக
திருமணம் விமர்சையாக நடந்தேறியது எல்லாரும் மெச்சும் வகையில் தன் மகளுக்கு திருமணம் நடத்தி வைத்ததாய் பெருமைப்பட்டு கொண்டால் மரகதம்
ஒரு மாத காலத்திற்கு பிறகு ஒரு நாள் கண்ணன் மரகதத்தை பார்க்க வந்தான்.
"அக்கா... அக்கா..."
"அடடா வாடா கண்ணா "
"அக்கா நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்" என்றான்
மரகதத்திற்கு மகிழ்ச்சி தாங்க முடிய வில்லை
"சரி டா ஒடனே ஏற்பாடு பண்ணிடுறேன். என் பொண்ணு கொடுத்து வச்சவட நீ மாப்பிளையா கெடைக்க" என்று ஏகத்திற்கும் புகழ்ந்தால்
"ஆமா அக்கா உன் பொண்ணு அபிராமி கொடுத்துவச்சவதான் " என்றான் கண்ணன் . இதை கேட்டு கொண்டிருந்த சுகுமாரனுக்கு ஒன்றும் புரியவில்லை
"என்ன டா சொல்ற "என்று அதிர்ந்தாள் மரகதம்
"ஆமா அக்கா நான் அபிராமிய தான் விரும்புறேன்
அவள்தான் கல்யாணம் பண்ண போறேன்" என்றான்
அவள் சொன்னதும் தன் எண்ணம் நிறைவேறிய சுகுமாரனுக்கு அளவில்லா மகிழ்ச்சி. அவர் இருந்த சந்தோசத்தில் பேய் போல ஆடிய தன் மனைவியை ஒரே வார்த்தையில் அடக்கினர்
"இங்க பாருடி இவ்ளோநாள் அபிராமிய நீ எவ்வளவோ கொடும பண்ண இப்ப அவளுக்கு ஒரு வாழ்க்க கெடச்சிருக்கு இது கெடுக்க பாத்தா நான் கொலைகாரனா மாறிடுவேன் ஜாக்கிரத " என்றார்
இதை எல்லாம் கேட்டு கொண்டு வாசலில் நின்ற அபிராமி மனதில் அளவில்லா மகிழ்ச்சி
அவள் முகத்தில் தோன்றிய புன்னகையை
காணும் போது கண்ணன் மனதில் ஒலித்தது
இந்த பாடல் ,
"முத்து நகையே
முழு நிலவே
குத்து விளக்கே
கொடிமலரே ............"