நன்றி சொல்லலாமே..
மூன்றெழுது நல்லசொல்
முகம் மலரசெய்யும்சொல்
எல்லோரையும் மதிக்கும்சொல்
யாவரிடமும் பண்பாகசொல்!
சின்னதோ பெரியதோ வேலையை
நல்லபடி முடித்தவர்க்கு
"நன்றி" என்று சொல்லிப்பார்
நன்மைகளை உண்டாக்கும்!
நாளைய வேலைகளும்
சிறப்பாக முடிக்கவைக்கும்!
நம்முகம் பார்க்கும் மற்றவரின்
முகம் மலரவைக்கும்!