தன்னையரிதலே காதல்

இப்போதெல்லாம் என்
கனவுகள் கூட வாசலோடுதான்
வந்து போகின்றன...
குயிலைகூட ரசிக்காத மனது
காக்கையின் கரையலுக்குகூட
கரைந்து போகிறது...
எறும்பின் கால்தடத்தைக்கூட
தேடிப்பார்கிறது,
பூந்தோட்டமே அருகில் இருந்தும்
திரும்பி பார்க்காத மனது
புல்தடம் கண்டு மகிழ்கிறது....
மாற்றங்களே இல்லையாயினும்
தினம் தினம் கண்ணாடி முன்
நிற்கவைப்பது உன் காதலால்
மட்டும்தான் ......
தன்னையரிதலே காதல் !!

எழுதியவர் : malar (11-Jan-11, 2:13 pm)
சேர்த்தது : nadarajah malar
பார்வை : 445

மேலே