ஆசைப்படு

ஆசைப்படு !
உலகில் உள்ள அத்தனைக்கும்
ஆசைப்படு !

ஆசைப்பட்டால் தான்
வாழ்க்கையானது வாழப்பிடிக்கும் !

புத்தன் சொன்னான்
ஆசையே அழிவுக்கு
வித்திடும் என்று...

ஆசை, அழிவுக்கு
வித்தாகும் என்றால்
இன்று,
இந்த உலகமே
இருந்திருக்காதே !

பேராசை வேண்டுமானால்
அழிக்கலாமோ என்னமோ
ஆசையானது அழிக்காது.

மனித எண்ணமானது
ஆசைப்பட்டால் தான்
நனவாகுமே தவிர
வெறுத்தால்
எண்ணமானது, மண்ணாகும்
மண்ணோடு
மண்ணாகும் !!!

எழுதியவர் : ப சா இராஜமாணிக்கம் (20-Oct-13, 3:21 pm)
சேர்த்தது : bsrajamaneekam
பார்வை : 60

மேலே