வாழ வைக்கும் தெய்வம் தாழ் பணி ...
வாழ வைக்கும் தெய்வம்
தாழ் பணிந்திடல்
தகுமெனக் கருதி
ஆலயம் பல அமைந்தனவே
உள்ளிரு தெய்வம்
உருமாறி உலகிதில்
உலா வருகிறதே
அன்னையும் பிதாவும்
முன்னறி என்று
மூதாட்டி ஒளவையும்
ஏட்டினில் ஏன்
எழுதியும் வைத்திட்டாரோ !