நீயே சொல் பெண்ணே..
நீ இல்லாத
நான்
விடை இல்லா
கேள்வி...
நீ இல்லாமல்
போனால்
அதுவே என்
தோல்வி....
நீ என்ற
ஒற்றை சுழியில்
மாட்டி கொண்டோம்
நானும் என்
கேள்விக்குறியும் .......
விடை பெறுவது
என் கேள்வியோ
இல்லை நானோ
உன்னிடமிருந்து....
நீயே சொல்
பெண்ணே..
காத்திருக்கிறோம்
நானும் என்
கை கடிகார
நொடி முள்ளும்....