அவள்
மலரை
கையிலேந்தி
ஊதிவிட்டு
அதன் படபடப்பில்
மகிழ்ந்துகொண்டிருந்தாள்
அவள்...
நான் பார்த்ததும்
விலகி
ஓரமாக நின்றுகொண்டாள்...
அவள்...
நான் புன்னகைத்தேன்...
இயல்பாய்
இருப்பதாக எண்ணி
நாம் தொலைத்ததை
அவள் பெற்றிருக்கிறாள்!
மனம் பிறழ்ந்த
அவள்...