ஓர்நாள்போதும்

முடிவேயில்லாத ஓர்பாதை
அதில் நீயும் நானும்...
தடுக்க யாருமில்லா -எம்
நடைப்பயணம்-துணையாய்
நிலவு ஒன்றே போதும்..!

வேற்றுக்கிரகம் இறைவனிடம்
கேட்டுப் பெற்றுக் கொள்ள
வேண்டும்-உனை
யாரும் கடத்திப்போகாது
காப்பாற்றி வைத்திருக்க..!

அச்சமில்லா நாட்களாய் அங்கே
அமையட்டும்..
அமைதியாய் ஓர்நாள் வாழ்ந்தாலும்
போதுமே நம் காதலிற்கு..!

எழுதியவர் : புஸ்பராசன் (1-Nov-13, 4:03 pm)
சேர்த்தது : புஸ்பராசன்
பார்வை : 74

மேலே