Unnai Enni
உன்னை எண்ணி...
பளிங்காய் மின்னிடும் நெற்றி;
மின்காந்த மீன்விழிகள்;
தேனூறிய செவ்விதழ்கள்;
கடிக்கச் சொல்லும் கன்னங்கள்;
அணி ஏங்கிடும் காதுகள்;
அழகே குவிந்த கழுத்து;
வைரமும் தோற்றிட்ட பற்கள்;
கூந்தலெனும் தோகை;
அதில் வாடா மலர் வாகை;
வனியே, வருணிக்க வார்த்தைகள் இல்லையடி;
ஒருமிக்கா சிந்தையில் தொல்லையடி;
கொடும்பாவியாய் கொல்கிறாய்;
கொஞ்சலும் சொல்லிச் செல்கிறாய்;
ஏஞ்சல் நீயடி,
ஏங்குகிறேன் நானடி.
இனி காதல் கூறும் நாட்கள் தோறும்...
ஆசைக்கு பணி-யவனாய்
என்றும் உந்தன் இனியவனாய்.....
AGALEX