கலங்கமுற்ற நிலா

புரிந்து போன
மன‌
ஆழ் இடுக்கைக்குள்
புதைந்து போன‌
நியாயங்களைத்
தடவிய‌
பொழுதுகள்.....!
எடுத்தியம்பும் வழி
அடுக்கிய‌
பயண‌ங்கள் என
பாதையறிய‌
முனைகிறது வயது....!
எதுவுமே
வழி நெடுகிலும்
வகை சொல்லிடும்
புலனெதுவோ....?
தடுத்திடும் அர்த்த‌
இருப்பு
மாயையதன்
நிஜம் உணர‌
நித்தமொரு
சங்கடம்.........!
உணர மறுப்பின்
புலனதில்
மழைச் சாரல்.......!
வழி மீறிய‌
வலி சுமந்த‌
நேசக்கர‌மதில்
எண்னணற்ற‌
கயிறு திரிப்புகள்....!
கலந்தது எதுவுமா....?
என வினா
தடவும் விடைகள்தான்
ஏது.................?

எழுதியவர் : (11-Nov-13, 1:10 pm)
சேர்த்தது : Jeevajothy
பார்வை : 74

மேலே