மதுவின் ருசியில் மாதுவின் மயக்கத்தில் இளைஞன்
கருவறையில் சுமந்தவள்....
கருவிழியில் தேடுகிறாள்...
கைப்பிடித்து நடந்தவர்...
கைத்தாங்கலாய் அழைத்துவருகிறார்...
அருகே இருந்த நட்பும்...
அறவே இல்லை இன்று...
ஏன்?
மதியால் வெல்வாய் உலகை நீ என்று...
படிக்க வைத்த பேதமறியா உள்ளங்கள்...
படிப்பில் அடிமாரி முதல் அடி எடுத்து வைத்தாய்...
வாழ்க்கையின் தடத்தை சறுக்க வைத்தாய்....
மனதிற்குள் வரைய தொடங்கினாய்...
தடுமாறும் வயதினுள்...
சேரா உலகினுள் நுழைந்தாய்...
வாழ்வின் இருளை விலக்குவாய் என்ற பெற்றோரின் ஆசையை...
நிராசையாக்கிவிட்டாய்....
உன் விழியின் இமைகளை
பெண்ணின் அழகிற்காக விளக்கியதால்...
தற்பெருமை (மதுவை) உற்சாகம் என்று சொல்லி குடிக்க ஆரம்பித்தாய்....
உந்தன் மதி புதைய ஆரம்பித்தது...
விடியல் இருந்த உந்தன் வாழ்வும்...
விடிவே இல்லாமல் மயங்கி கிடக்கிறது...
மதியை மறக்கிறாய்..
மனிதத்தை இழக்கிறாய்....
மாதுவை சிதைக்கிறாய்....
மதுதான் உற்சாகமா...
என்னடா ! இதுதான் உன் வாழ்வா....
மற்றத்தெல்லாம் வெறும் மாயமா....
மதியை மறந்தவனே....
மதுவை குடிக்கிறாய்......
விழியில் இருந்தவனே....
வழியை தேடுகிறாய்....
இதுதான் வாழ்வின் விதியா ?
வீதியில் கிடக்கிறாய் நீ...