வைரமுத்து கவிதைகள்

கைகள் நான்கும் தீண்டும் முன்னே கண்கள் நான்கும் தீண்டிடுமே
மோகம் கொஞ்சம் முளை விடுமே கண்பார்வை முதல் நிலையே
உள்ளம் கொண்டது ஓர் மயக்கம்
காதலில் இரண்டாம் நிலை தான் பால் மயக்கம்
மெய் தீண்டும் நேசம் தொடங்கியதோ
இது காதலில் மூன்றாம் படி நிலையோ
என் உடல் வழி அமிர்தம் வழ்¢கிறதோ
என் உயிர் மட்டும் புதுவித வலி கண்டதோ...
என் உயிரே உன்னைக் கொஞ்சம் தீண்டுவேன்
ஏழ் வகை காதலை எப்போதெங்கே தாண்டுவேன்
இதில் நான்காம் நிலையை அடைந்துவிட்டென்
என் நறுமலரே உன்னை தொழுதுவிட்டேன்
என் சுயநிலை என்பதை இழந்துவிட்டேன்..
அந்தச் சூரியன் எழும் திசை மறந்துவிட்டேன்...
என் உடல் பொருள் தந்தேன் சரண் புகுந்தேன்
என் உயிரை உனக்குள் ஊற்றிவிட்டேன்
இது தான் காதலில் ஐந்து நிலை
நான் உன் கையில் நீர்த்திவலை
இந்தக் காதலில் மரணம் தான் ஏழு நிலை
இது இல்லையென்றால் அது தெய்வீகக் காதல் இல்லை
உடல் மரிக்கின்ற காதல் மரிப்பதில்லை...