மலர்களே மலர்களே
புது வாசம் உனக்குள்
உன் வாசம் எனக்குள் !
உன் உயிர் வேரோ மண்மீது
என் உயிர் வேரோ உன்மீது !
புன்னகையை உடுத்திக்கொண்ட பூக்களே
பூலோகத்தில் எனக்குக் கிடைத்த பொக்கிஷமே !
தினம் தினம் நமக்குள் ஒரு ஒப்பந்தம்
அதிகாலை யார் முதலில் புன்னகைப்பது என்று
தினம் தினம் தோற்பது நான்தான்.....!