மலர்களே மலர்களே

புது வாசம் உனக்குள்
உன் வாசம் எனக்குள் !

உன் உயிர் வேரோ மண்மீது
என் உயிர் வேரோ உன்மீது !

புன்னகையை உடுத்திக்கொண்ட பூக்களே
பூலோகத்தில் எனக்குக் கிடைத்த பொக்கிஷமே !

தினம் தினம் நமக்குள் ஒரு ஒப்பந்தம்
அதிகாலை யார் முதலில் புன்னகைப்பது என்று
தினம் தினம் தோற்பது நான்தான்.....!

எழுதியவர் : நா.வளர்மதி. (14-Nov-13, 7:08 pm)
Tanglish : malargale malargale
பார்வை : 136

மேலே