காதலின் நிலைகள் மூன்று.

காதலின் ஆரம்ப
நிலையில்


தனிமையில் சிரிப்பாய்!

கண்ணாடியின் தடிமன்
உன் பிம்பத்தால் மெலியும்!

சீப்பின் பற்கள் பழுதடைந்து போகும்!

ஒழுக்கம் கடை பிடிப்பாய்!

ஒரேநாளில் பலமுறை
அலங்கரித்து கொள்வாய்!

உன்னவள் பவனி வரும்
தெருமுனைகளின் பிள்ளையார்க்கு
நண்பனாவாய்!

உன் தூக்கம் குறையும்!

பசியின் புனிதம் புரியும்!

நீ தேவனாவாய்,
உன்னவள் தேவதையாவாள்,
உங்கள் தெரு பிள்ளைகள்
உங்களுக்கு தூதுவர்கள் ஆவார்கள்!

சிறகில்லாமல் பறக்கச் செய்வாய் !

சில எதிரிகளும் முளைத் தெழுவர்......!


காதலின் இடை
நிலையில்


எதிரிகளின் வாயில்
அகப்பட்ட அவலாகிப்போவாய்!

சுற்றத்தாரின் வார்த்தைகளே
உன்னை வதக்கி, வறுத்தெடுத்துவிட,
போர்களத்தில் எதிரிகள் எய்த
அம்புகள் துளைத்த போர்வீரன்
போல் உணர்வாய்!

உன் உள்ளத்தில்
இடி இடிக்கும்!

கண்களில் மழை
சொரியும்!

வற்றாத ஜீவ நதிகள் இரண்டு
கன்னங்களில் வழிந்தோடி
கால் நோக்கி பிரயாணப்படும்!

மௌனம் உன் தேக தேசத்தின்
சிறப்பு மொழி ஆகிப்போகும்!

சிரிப்பு கானல் நீராய்க்
காணமல் போகும்!

அழவேண்டி மட்டுமே
கழிவறைக்கதவை
தாழிட்டு கொள்வாய்!

நமுட்டு சிரிப்பும்,ஏளன பேச்சும்
அறிவுரைகளும் உனக்காய்
பிரதானமாகிப்போகும்!

முட்கிரீடம் தலைசூடி
காதலை நோக்கி
கடும்தவம் புரிவாய்!

காதலை
அணுகவும் இயலாமல்
அகலவும் இயலாமல்
நரக நெருப்பில்
கால்புதைத்தவனாய்
துடிதுடித்துப்போவாய்..........!



காதலின் கடை
நிலையில்


சூழ்நிலையை மாற்றியமைக்கும்
சக்திகொள்வாய்!

சமுக மூட தனத்தை
முறியடித்து!

ஜாதி,மத,பேத
தடைகளைத் தவிடு பொடியாக
தகர்த்தெறிந்து !

காற்றினில் கலந்த வாசமாய்,
கடலினில் கலந்த மழைத்துளியாய்
காதல் ஜோதியில் கலந்து,
காதல் தேசத்து மன்னனாவாய்!

வாழ்கை அழகுபெற,
வாழ்கை அர்த்தப்பட
காதலியுங்கள்....!

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (22-Jan-11, 4:35 am)
சேர்த்தது : a.naveensoft
பார்வை : 424

மேலே