இயற்க்கை பெண்ணே
கனவு தேவதையே,
கண் பாரா தேன்மழையே..
உச்சி குளிர முத்தமிட்ட
என்னுயிரே..
கைவிரல்கள் தலைகோதலில்
மெல்ல மெல்ல
நீ வருடிட ,
விழி மூடி தலை சாய்க்க
தேவை உன் மடியே..
விழி பேசாது
இமை மூடாது,
விரல் தேடாது
வீணை மீட்டாது ,
நீ வாராது
உள்ளம் நெகிழாது,
உணர்வுகள் தூங்காது ..
வாழ்கை வசந்தமாவதும்,
கசந்துபோவதும்
உன் வருகையினாலே..
நெஞ்சமது
இன்பத்தால் நெகிழ்வதும்
துன்பத்தால் உடைவதும்
உன் பிம்பம் கானலிலே..
சுவாசமாய் உன் வாசம்
என்றாவாய் நீ என் வசம்
உருக்கமான தேடலில்
ஏனோ பரவசம்
உன் மேல் அளவற்ற நேசம் அதனாலோ...
உணர்வுகளில் கலந்தாகிவிட்டாய்
உதறித்தள்ள மனமில்லை
என் செய்வேன்?..
சருகு நான் சாரத்தில் அமர்வதும்
சாரல் நான் மண்ணோடு சேர்வதும்
சங்கீதம் நான் சிகரம் சென்று அடைவதும்
வியர்வை நான் விடை பெற்று போவதும்
இதயம் நான் இடைவிடாது துடிப்பதும்
உன்னாலே... உன்னாலே..
விழியோரமாய் சிறுதுளி
வளி உன்னால்
நெஞ்சுக்குள் சிறு வலி...