ஆடு மாடெல்லாம் பேசுதுங்க கேளுங்க
மாட்டுக்கு பேச வாயப்பளித்தேன்
அது சொன்னது
,......இல்லை திட்டியது
மானங்கெட்டவனே
நான் ஈன்ற பிள்ளைக்கும்
பால் இல்லை
நீ பெற்ற பிள்ளைக்கும்
தண்ணீர் கலக்காத
நல்லப் பாலை கொடுக்க
வக்கில்லையென்று!!!!
ஆட்டுக்கு பேச வாயப்பளித்தேன்
அதனுடைய பங்கை
சிறப்பாய் சொன்னது
நீ ருசியறிய என்
உடலை புசிக்கிறாய்
அதுபோகட்டும்.....
என் கழுத்தை
அருத்தால் வலிக்கும்
என்று கூடவா
தெறியாது
தண்ணீருக்கு பதிலாக
மயக்க மருந்தை
தெளிங்கடா
வழியில்லாமல்
சாவுகிறேன்
முயலுக்க பேச வாய்ப்பளித்தேன்
அது சொன்னது
உன் முகத்துல
ஒளியைக்கட்டிக்கிட்டு
என்னை வேட்டையாட சொல்லுதாடா
வெக்கங்கெட்டவனே
கோழிக்கு பேச வாய்ப்பளித்தேன்
பயங்கரமாய் சொன்னது
உங்களை கொன்றுவிடுவேன்
கொத்தி தின்றுவிடுவேன்
என் குரவலியைப்பிடித்து
அறிக்குறிங்களேடா
கொலைகாற பசங்களா
என் முட்டையையும் திங்குறிங்க
கழுத்தும் அறிக்குறிங்களேடா
இது ஞாயமா.......
மீனுக்கு பேச வாய்ப்பளித்தேன்
அருமையா சொல்லுச்சுங்க
உங்கள் தொல்லை தாங்க
முடியவில்லை என்றுதானே
நீருக்குள் வந்தேன்
இங்கும் வந்துட்டிங்களாடா
மீசையை முருக்கிக்கிட்டு
பாம்புக்கு பேச வாய்ப்பளித்தேன்
சும்மா நச்சுனு சொல்லுச்சுங்க
சும்மா இருக்குற என்ன
சீன்டி பாக்குறதே
வேலையாப்போச்சு
ஆமா.....
காதில்லாத என்கிட்ட ஏன்டா
கண்டதையும் வச்சு ஊதுறிங்க
எனக்கே வேடிக்கையா இருக்கு போங்கப்பா!!!
இப்படி உண்மையிலே
நம்மையெல்லாம் திட்டுவதற்குள்
நாமே திருந்திவிடுவோம்