வயோதிபக் குழந்தை

இன்றைப்போல்தான் அன்றும்

படுக்கையிலும்
உறக்கத்திலும்
மலம்
சலம் கழித்துக்கிடந்தான்(ள்) அவன்(ள்)

இன்றைப்போல் அன்று
அவனை(ளை) யாரும் திட்டவுமில்லை
மூக்குப்பொத்தி முணங்கவுமில்லை !!!

அன்றும் இன்றும்
அவன்(ள்) உருவம் ஒன்றைத்தவிர
அப்படியேதான் இருக்கிறது உள்ளம்
ஒரு குழந்தை போல இவனு(ளு)க்கும் !

எழுதியவர் : - பிரகாசக்கவி - (5-Dec-13, 6:53 pm)
பார்வை : 73

மேலே