என் இதயம்

பார்த்தப் பொழுது தொலைந்து போனேன்
பார்க்கும் போதெல்லாம் என்னை மறந்துப் போனேன்

கள்வனே
மனத்தினை மாற்றப் பார்க்கிறாய்
மனத்திக்குள் அசை வளர்க்கிறாய்

கனவுக்குள் ஒரு கணக்கு நடத்துகிறாய்
கனவிற்குள் கனவைத் தருகிறாய்

கணநேரத்தில் இதயம் திருடினை
கனமாய் நெஞ்சில் இருக்கிறாய்

நித்தமும் உன்னை நினைத்து
நித்திரையை மறந்து ஏக்கத்தில் உறைந்து போனேன்


வரவேற்பில்லாமல் நுழைந்த உன் நினைவுகள்
என்னை இலஞ்சம் கொடுத்தாவது என் காதலை உன்னில் சங்கமிக்க கூச்சல் போடுகிறது

என்னில் அலங்கரிக்கப்பட்ட என் காதல்
உன்னில் அங்கீகரிக்கப்படாதது ஏன் ?

ஒருமுறை மறுமுறை உன் இதயத்தைப் கேட்டுப் பார்
அது உரைக்கும் என் காதலை.

திருடப்பட்ட என் உள்ளத்தை திருப்பி தர வேண்டாம்
உயிர்வாழ இதயத்துடிப்பிற்கு உன் இதயம் கொடு அன்பே

எழுதியவர் : harihari (5-Dec-13, 8:13 pm)
Tanglish : en ithayam
பார்வை : 94

மேலே