மனிதனாக வாழ்
உப்பாக இரு,
கரைந்து போக அல்ல,
அந்த கரைதலிலும்
ருசி கொடுக்க ......
மெழுகாக இரு,
உருகி போக அல்ல,
அந்த உருகுதலிலும்
ஒளி கொடுக்க ......
பேனாவின் மையாக இரு,
தீர்ந்து போக அல்ல,
அந்த தீர்தலிலும்
சத்தியத்தை நிலைநாட்ட ......
எறும்பாக இரு,
பிறரால் கொல்லப்படுவதற்கு அல்ல,
அதிலும்
அனைவருக்கும் சுறுசுறுப்பை கற்று கொடுக்க ......
எப்படி இருந்தாலும்,
முதலில்
மனிதனாக இரு ....
பார் போற்ற வாழ் ....
உலகம் உன்னை திரும்பி பார்க்கட்டும் ....
சரித்திரம் உனது பெயரை பறைசாட்டட்டும் ....