அதிகாலைப் பனியில்

பனியும் பெய்யுது குளிரும் நடுக்குது
கூதல் அடிக்குது வாடை வாட்டுது...!

தண்ணீரில் கைவைத்தால் சில்லென இருக்குது !
தரையில் கால்பட்டால் ஜிவ்வென இழுக்குது !

உடம்பும் வேலைசெய்ய ஒத்துழைக்க மறுக்குது!
உள்ளமோ இழுத்துமூடி படுக்கச் சொல்லுது !

மூடுபனி புகைபோலும் விழிமுன்னே விரியுது !
முன்செல்வோர் முகம்கூட நிழல்போலே தெரியுது !

மூக்கடைப்பு வந்ததாலே சுவாசம் சிரமப்படுத்துது !
மூட்டுவலியும் சேர்ந்ததாலே வலிஆளைக் கொல்லுது !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (9-Dec-13, 9:56 am)
பார்வை : 103

மேலே