இவை போலவே
போதிமரத்தடியில்
நாய்கள் கூடலாம்.
மகாத்மாவின் கல்லறைமேல்
பறவைகள் எச்சமிடலாம்.
மயிலிறகு விற்பவனிடம்
மாடுகள்பற்றி விசாரிக்கப்படலாம்.
..................
..................
..................
இவை போலவே,
புனித மலர்கள் நிறைந்த
நமது நேசத்தை
வெறும் காகிதப்பூக்கள் எனலாம்
நீ.