அன்னைத் தமிழ்

குமரி யிலேத் தோன்றி
குவளயம் முழுதும் ஆண்டு
நலந்தரு நாகரீகம் நயந்து
நானிலத்துக்குப் பல்கலை பகர்ந்து
இன்னதினம் தோன்றின தென்று
இன்னும் அறிய முடியாது,
பண்ணமைத்து பாவலரும்-வீரப்
புண்பெற்றுப் புரவலரும் காக்க
அருள்வேங்கடமுதல் அம்பாறைவரை
மறமுடன் வாழ்ந்து –புகழ்
விளங்கி நிற்கும் மக்கள் பெற்ற
வீரமிகு தமிழ்த் தாயே!
முக்காலும் நின் பிள்ளைகளை
அக்கரையுடன்காத்திடு வாயே!

எழுதியவர் : velmurugan tamil (10-Dec-13, 2:30 pm)
பார்வை : 183

மேலே