பேசிப் பார்த்தேன்
காற்றோடு பேசிப் பார்த்தேன்
என்னையே கேட்டது
வாழ்ந்து பார்க்க ...!
வானோடு ஓடிப் பார்த்தேன்
மழையை அனுப்பியது
வாழ்த்து சொல்ல...!
நிலவோடு நடந்து பார்த்தேன்
எனக்கு முன்னே சென்றது
என் வீட்டு முற்றத்தில்...!
கடலோடு அணைத்துப் பார்த்தேன்
அலையை அனுப்பியது
என்னை மணக்க வேண்டி ...!