பூ

முழம் தொடுத்து
உளம் செல்லும்
மல்லிகையே..!

வேனல் கண்டு
வெட்கம் கொள்ளும்
தாமரையே...!

நிலவொளியில்
இதழ் விரியும்
அல்லியே...!

மையல்
மஞ்சள்
செவ்வந்தியே...!

வாசத்தால்
தன் வசமிழுக்கும்
தாழம் பூவே...!

மனம் கவரும்
பூக்களே
உங்களால்
தரணியெல்லாம்
தினமும்
மணநாட்களே...!

எழுதியவர் : வைரமுத்து ST (12-Dec-13, 10:40 pm)
சேர்த்தது : VAIRAMUTHU ST
பார்வை : 165

மேலே