கல்யாண வீட்டில் ,,,,,,,,

கல்யாண வீட்டில் ரொம்பவே அழகாய் இருந்த அந்த பெண் அடிக்கடி அவனது கண்ணில்பட்டாள். ஓரிரு முறை அவனை பார்த்து மெலிதாய் சிரிக்கக்கூட செய்தாள். ‘போறதுக்குள்ள அவளை எப்படியாவது தூக்கிற(?) வேண்டியது தான்’ என்று முடிவுசெய்தான் அவன் ...

பந்தி முடிந்து வரும் வழியில் தனியே மாட்டினாள் அந்த பெண் அவனிடம் .

“ஹாய்.. ஐ ம் அருண்..” என்றபடி அவளிடம் கையை நீட்டினான் ..

“ம்..” என்றாள் கேள்வித் தோரணையில்.

“ ஓ.. இங்கிலீஷ் தெரியாதா.. உன் பேரு என்னன்னு கேட்டேன்”

“ அதற்கும் “ம்..” என்றே பதில் தந்தாள்..

“ச்.. தமிழுமா.. ஆப்கா... நாம்..க்யா ஹே..” என்ரான் அவனது ப்ராத்மிக் ஹிந்தியை மனதில் கொண்டு வந்து...

“ ஹிந்தியும் இல்லைனா என்ன... தெலுங்கா...” எனக்கு தெலுங்கெல்லாம் தெரியாது.. டி.வி.டியில படம் பாக்குறதோட சரி...

இதற்கு அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.. தலையை திருப்பி யாரையோ தேடினாள்..

கொஞ்ச நேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன் ..

“ஆங்.. கண்டுபிடிச்சுட்டேன்.. கேரளா... மலையாளம்.. கலரா இருக்கும் போதே நினைச்சேன்... இப்போ சொல்லு.. நிண்ட பேரு எந்தா?”

இப்போது அவள் மெதுவாய் அவனைப்பார்த்துப் புன்னகைத்தாள்..

“என் நிலைமை சிரிப்பா இருக்குதா.. இதப்பாரு எனக்கு வேற மொழியெல்லாம் தெரியாது அதனால நீயே சொல்லிடு.. அட்லீஸ்ட் ஏதாவது பேசு அதவச்சாது நீ எந்த மாநிலம்னு தெரிஞ்சுக்கறேன்” என்ரான்
“..............”

அப்போது அங்கு வந்த அவனது மனைவி “ஐயோ.. அருண்.. அவளுக்கு இன்னும் ஒரு வயசு கூட ஆகலை.

பேச்சு வராத குழந்தைய கேட்டா எப்படி பதில் சொல்லுவா? அவ பேரு சுபா” என்றபடி அவளைத் தூக்கிக் கொண்டு உள்ளே போனாள்.

எங்க கொண்டு வச்சான் பாருங்க டிவிஸ்ட... அவ்வ்வ்வ்

எழுதியவர் : முகநூல் (13-Dec-13, 4:11 pm)
பார்வை : 675

மேலே