கண்கள் குளிரத்தான்

​ஊரின் எல்லைதான்
உண்மை நிலைதான் !

அருமை அழகுதான்
அமைதி பகுதிதான் !

​வாழும் இல்லம்தான்
வாழ்ந்திட விருப்பம்தான் !

தனிமை விரும்பிதான்
தயக்கம் இல்லைதான் !

இன்பம் பொங்கும்தான்
இதயமும் வழியும்தான் !

காணாத காட்சிதான்
காலமும் களிப்புதான் !

எழுந்திட்ட எண்ணம்தான்
எழுத்தில் வந்தவைதான் !

கண்டு மகிழத்தான்
கண்கள் குளிரத்தான் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (14-Dec-13, 3:10 pm)
பார்வை : 2873

மேலே