விருதுகள்-2013 வெண்பா வேந்தன்--2013

வணக்கம் தோழர்களே

கடந்த ஆண்டு தளத்தின் மரபு பா மாமணி 2012 விருதினை தோழர்கள் காளியப்பன் மற்றும் கிரிகாசன் ஆகியோருக்கு அளித்தோம்.தோழர் கிரிகாசன் சில காப்பியங்களை மரபு வழியில் படைத்தளித்துள்ளார்.

2013ஆண்டு முழுதிலும் தோழர் காளியப்பன் பலரின் படைப்புகளுக்கு வெண்பா நடையில் கருத்துக்கள் அளித்து வருவது நமது பெருமைக்கும் மகிழச்சிக்கும் உரிய பாங்கு. அவரது வெண்பாக்கள் அடங்கிய பகுதிகள் கொண்ட எனது நூல் விரைவில் வெளி வர உள்ளது!!!

மரபு வகைகள் குறைந்து வரும் இக்காலத்தில் தளத்தில் மரபு நடையில் பாக்கள் அளித்து வரும் தோழர் .காளியப்பன் எசக்கியேல் 2014ஆம் ஆண்டின் முதல் விருதாக " வெண்பா வேந்தன்--2013" எனும் விருது பெறுகிறார்.

**************************************************************************

" வெண்பா வேந்தன்--2013" காளியப்பன் எசக்கியேல் வாழ்க வளர்க..உயர்க...உலகில் உலா வருக..

****************************************************************************

எழுதியவர் : அகன் (17-Dec-13, 9:34 am)
பார்வை : 124

மேலே