மாணவ மாணவியருக்கு சில அறிவுரைகள்

நேரத்தோடு தேர்வுக் கூடத்தில் நுழைவீர்.
நெருடும் அச்சத்தைத் தவிர்ப்பீர்.
நேரம் பார்த்து தேர்வு எழுதாதீர்.
நடுக்கம் இல்லா நினைவுக் கொள்வீர்.

தேர்வு நாளிலும் காலையில் எழுவீர்.
தேர்வுக்கு ஆயத்தமாய் திருத்தம் கொள்வீர்.
தேவையானவற்றை எடுத்துக் கொள்வீர்.
தயக்கம் இன்றி தெளிவாய் இருப்பீர்.

தேர்வுத் தாளை நன்கறிந்து
தேர்ச்சிக்கான பதிலை எழுதுவீர்.
தேவையானதை தேர்ந்தெடுத்து
தெளிவுபட எழுதிடுவீர்.

தேர்வுக்கு செல்லும் முன்னே
தாய் தந்தையரை வணங்கி
தைரியமுடன் தேர்வுக்கு செல்வீர்.
தெரிந்தவற்றை முதலில் எழுதுவீர்.

கட்டுக் கட்டாய் பிட்டுகளை
கணக்கில்லாமல் பதுக்காதீர்.
கண்டுப் பிடித்துவிட்டால் - கல்வியால் வாழும்
காலத்தை இழக்காதீர்

காலாண்டு அரையாண்டு முழுவாண்டு
காலத்திற்க் கேற்றவாறு - கல்வியில்
கவனமாய் நினைவில் ஏற்று.- எதிர்க்
காலமுண்டு என எண்ணி நடையைப் போற்று.

தேர்வுத்தாள் பெற்றவுடன் சிலநிமிடத்தில்
தெளிவாக பார்வையிட்டுக் கொள்வீர்.-பின்
தெளிந்த நடையில் பதிலை பதிப்பீர்.-மனதைத்
தாக்கும் பய உணர்வினைக் கொள்ளாதீர்.

தேர்வுகள் வருமுன்னே - உங்களுக்கு கேள்வி
தடயங்களை தந்துதவிய ஆசிரியர்களின்
துடிப்புகளை துச்சமென துடைத்திடுவீர்.
தேர்வு எழுதி நன்மதிப்புப் பெற்றிடுவீர்.
உலக அரங்கில் உன்னத நிலை எய்திடிவீர்.

எழுதியவர் : சு. சங்கு சுப்ரமணியன். (22-Dec-13, 6:08 am)
பார்வை : 323

மேலே