செம பொண்டாட்டி செம புருஷன்

கணவனோட பிறந்தநாள் அன்று மனைவியை அழைத்துக்கொண்டு அவன் தியேட்டருக்கு படம் பார்க்க போனான்..அதுவும் "மூன்றாம் உலகம்".. என்ற நச் படத்துக்கு..
.
"..ஹே ஜானி..!! என்ன மேன்.!! இன்னிக்கு சூப்பரா ட்ரெஸ் பண்ணி இருக்கே.!!! என்ன விஷேசம்..!!" என்றார் வாசலில் டிக்கட் குடுப்பவர்..
.
"..அப்போ..!! நீங்க அடிக்கடி இங வர்ர ஆள் போல இருக்கே.!!".. என்று மனைவி சந்தேகத்தை ஸ்டார்ட் பண்ணினாள்.
.
"...ஐயையோ..!! இல்ல சுதா..!! அவன் என்கூட படிச்சவன்..!! இப்போ தியேட்டர்ல வேலை பாக்குறான் டா..! அவ்ளவுதான்..!".. என்று மனைவியை கூல் பண்ண பார்த்தான்..
.
"..அடடா..! வீணாக சந்தேக பட்டுடோமே"..ன்னு மனைவி சமாதானமாகி , அவருடன் உள்ளே சென்றாள்..
.
"..பாப்கார்ன் வாங்கிட்டு போகலாம்".. என்று முடிவுபண்ணி அவன் காண்டீனை நோக்கி சென்றான்..மனைவியும் கூட பின்னாலே போனாள்..
.
"..என்ன ஜானி..!! சில்லறை இல்லையா..!! எப்ப பாரு 500 ரூபா நோட்டா தந்து எங்களை சங்கட படுத்துறே..". என்று பாப்கார்ன் விற்பவன் சொன்னதும் மனைவிக்கு நட்டுகிட்டது.. கணவன் கொலைவெறியோடு காண்டீன் காரனை முறைத்துவிட்டு இடத்தை காலிசெய்தான்.
.
மனைவி கேட்பதற்கு முன்னாலேயெ அவனே முந்திக்கொண்டு.. "..அப்டி பார்க்காதே சுதா..!! எங்க ஆபீஸ்ல பியூனா வேலை பார்த்தான்னு சொன்னேன்ல..! அவந்தான் இப்பொ இஙக வேலை பார்க்கிறான்"....அப்பிடி இப்பிடின்னு சமாளிக்க பார்த்தான்..
.
மனைவிக்கு லைட்டா சந்தேகம் வர ஆரம்பித்தது..."..பியூன் எல்லாம் வாடா போடான்னு பழகுற அழவுக்கு உங்க ஃப்ரெண்ட்ஷிப் இருக்கு.".என்று முணுமுபுத்தபடி கோபத்தை வெளிக்காட்டிகொள்ளாமல் தியேட்டர் வாசலுக்கு சென்றாள்..
.
டிக்கட் கிழிப்பவன் ஏதாவது ஏழரையை போட்டுவிட கூடாது என்று கொலை நடுக்கத்துடன் வாசலுக்கு சென்றான் கணவன்.
.
"..வழக்கமா படம் போட்ட அப்புறம் இருட்டுக்குள்ள தான் போவே..!! இன்னிக்கு என்ன சீக்கிரமே.. உனக்கு மச்சம்டா.. என வாசலில் டிக்கட் கிழிப்பவன் வில்லங்கத்தை ஆரம்பித்து வைத்தான்..
.
அவ்வளவுதான் மனைவிக்கு தாறுமாறாக ப்ரெஷர் எகிறி, டென்ஷன் ஆகி திடீரென தியேட்டரை விட்டு வெளியே ஓடினாள்..ஏழரை ஆரம்பித்துவிட்டதை உணர்ந்த கணவனும் அவளை துரத்தியபடி ஓடினான்..
.
வெளியே வந்த அவள், ஒரு ஆட்டோவை மறித்து அழுதபடி ஏறினாள்.. நிலைமை சீரியஸ் என்பதை உணர்ந்த கணவனும் பாய்ந்து ஆட்டோவுக்குள் ஏறினான்..
.
"..என்ன ஜானி சார்...! வழக்கமா நச்சு ஃபிகரை தள்ளிக்கிட்டு வருவிஙக..!! இன்னிக்கு என்ன சார்!! இந்த அட்டு ஃபிகர்தான் மாட்டிச்சா..!! போங்க சார்..!! வழக்கமா போறா லாட்ஜ் தானே போவணும்.. என்றான் ஆட்டோக்காரன்..
.
மிச்சத்தை நீங்களே யோசிச்சுக்குங்கோ..!!!!

எழுதியவர் : ஜில்லுனு ஒரு ஷாகுல் (22-Dec-13, 8:49 pm)
பார்வை : 626

மேலே