வாழ்வைச் சுமப்பவள்

உழுதவன் கணக்குப் பார்த்தால் ?
உழக்குக் கூட மிஞ்சாது !
உழைப்பவன் கணக்குப் பார்த்தால்?
உணவு கூட மிஞ்சாது !

பல பேருக்கு அன்னமிட்ட கைகள் ,
பசியில் உறங்குது இரவில்?
பார்த்துப் பார்த்துப் பதறிய நெஞ்சம்,
பாசம் இல்லாத இடத்தில் தஞ்சம்!

காசு செடியில் முளைக்கும் இலையா?
காய்ந்து விழும் சருகுகளும் பணமா?
காசுக்கு உழைக்குதுப் பிணமா !
கவலைப் பட இது தினமா ?

காய்ந்த வயிறுடன் உறக்கம் ,
காதலில் இல்லாத மயக்கம்.
காலை வரை எண்ணிப் பார்த்தும் ,
காயம் மட்டுமே தினமும் மிஞ்சும்.

வாரி வாரி இறைத்த கைகள்,
வாரிச் சென்றவர்கள் பொய்கள் .
வாழ்வைச் சுமப்பவள் தைய்யல்
வாழ்வில் துடிக்கிறாள் மெய்யில் .........?


..................................சஹானா தாஸ் !

எழுதியவர் : சஹானா தாஸ் (22-Dec-13, 9:47 pm)
பார்வை : 554

மேலே