எச்சரிக்கை

பேராசை சுயநலம்
தீய எண்ணம் சாதிப் பேய்
இவற்றை எல்லாம்
தீயிட்டுக் பொசுக்குங்கள்;
மனம் தூய்மைப் படவேண்டும்
மதம் பக்தி ஆகியவற்றை
மனத்திலே பூட்டிவையுங்கள்.
எங்கும் நிறைந்தவன்
உங்களுக்குள் இருப்பவன்
அவனைத்தேடி நேரத்தை
வீணடிக்க வேண்டாம்.
உழைப்பவர் நெஞ்சம்தான்
அவனுறையும் ஆலயம்.
ஏய்த்துப் பிழைப்பவரும்
அவன்பேரை அடிக்கடி உச்சரிப்பார்
அவரிடம் வீழாதிருக்க
அதுவே நமக்கு எச்சரிக்கை.

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (24-Dec-13, 10:47 am)
Tanglish : yacharikkai
பார்வை : 256

மேலே