வளர் பிறை-26

ஒரு வழியாக அந்த இடம் வந்து சேர்ந்தது அந்த வண்டி,,,,,,,,, எங்கும் கும்மிருட்டு,,,,,,, கையில் டார்ச் உதவியுடன் வண்டியிலிருந்து வெளியே வந்தனர் அனைவரும்,,,,,,,,,,

"தம்பி அந்த பாவி,,,,,,,"

"நீங்க உள்ள போங்க நான் அவனை கொண்டு வரேன்"

"சரி தம்பி"- உள்ளே போனார் குணசேகரன்

ரகு(ரவி) வண்டியின் பின்னிருக்கையில் இருந்த கணேஷிடம் வந்தான்

"இங்க பாரு டா நான் இந்த மூட்டிய தூக்கி கிட்டு உள்ளே போறேன் நான் போய் கொஞ்ச நேரத்துல உனக்கு சிக்னல் தருவேன்,,,, இந்தா இந்த பிஸ்டல் வச்சிக்கோ,,,,, நான் சிக்னல் கொடுத்த உடனே உள்ளே வந்துடனும் சரியா"- கணேஷிடம் எல்லா விவரங்களையும் சொன்னான் ரகு(ரவி)

"சரி டா"- பிஸ்டலை வாங்கி கொண்டான் கணேஷ்

ரவி அந்த மூட்டையை எடுத்து கொண்டு உள்ளே போனான்,,,,,,,,

"அப்பா பாவி என்ன கணம்"- மெல்ல முனகினான்

மூட்டையை கீழே வைத்தான்,,,,

"அண்ணே அந்த மூட்டைய பிரிங்க"- குணசேகரனிடம் சொன்னான் ரவி

அவர் மெல்ல மூட்டையின் முடிச்சிகளை அவிழ்த்தார்,,,,,, உள்ளே இருந்தது கணேஷ் இல்லை
அதிர்ந்தார்,,,


மறுபுறம்


"என்ன நான் கேட்டுட்டே இருக்கேன் நீ பதிலே சொல்லாம நிக்கிற எங்க ஜோதி ???? எதுக்கு சாமியறலாம் கூட்டிட்டு வந்துருக்க"- கேள்விகள் வந்தது குணசேகரனிடமிருந்து,,,,,,,,,,


"இல்லங்க நம்ம பொண்ணு உடம்புல எதோ ஒரு தீய சக்தி இருந்து அவல ஆட்டி படைக்குது,,, அதன் அவ இவ்ளோ கஷ்ட படுறா அதான் சாமியார கூட்டிட்டு வர போனேன்,,, ஆனா அவல இப்போ காணும்"

"ஒரு வயசு பொண்ணு அவளை காணும்னு இவ்ளோ ஈசியா சொல்ற,,,, முதல தேடலாம் வா"- பதட்டத்தோடு சொன்னார் குணசேகரன்...


இவை எல்லாம் நடந்து கொண்டிருக்க,,,, அந்த பௌர்ணமி இரவில்,,,,,,, ஆந்தையில் அலறலும், ஓநாய்களும் ஓலமிட,,,,,, குளிர் ஊசியாய் உடலை துளைக்கும் அந்த நாடு நிசியில்,,,,, மலை பாதையில் நடந்து கொண்டிருந்தாள் ஜோதி



(வளரும்.,,,,,,,,,,)

எழுதியவர் : நிலா மகள் (28-Dec-13, 3:13 pm)
பார்வை : 116

மேலே