கவனமுடன் தோழிக்கு
காதலை எழுதாதே ,
அது நடைமுறைக்கு தேவையில்லாத விதிமுறை !
என்கிறாயே யோசனையின்றி !
அதுதானே மனதையும் உடலையும் ஒன்றாக்கி,
ஒரே திசையில் பயணித்து பாடுபட,
மறைமுகமாய் கற்றுத்தந்தது கவனமாய் !
அன்பிற்கும் பாசத்திர்க்குமான முழுமுகத்தை,
அதுதானே அறிமுகம் செய்துவைத்தது !
தேடிப்பற்றிய அதை ஏனோ நெறித்து எறிகிறாய்?
தள்ளிநின்று யோசி துல்லியமாய் உணர்வாய் !
ஒருசொட்டு காதலில்லாமல்,
ஒருகூடை பூக்களின் மனதுக்காரி,
நீ எப்படி உருவாகி என்மீது நேசம் காட்டுவாய்?
அடியே தோழி !!
நாமெல்லாம் கடந்துபோகிறவர்,
அதுவெல்லாம் தழைத்த விழுது !!