உனக்காய் காத்திருக்கிறேன்

விழிகள் தூங்கும் இனிய இரவிலும் ,
எனக்காய் விழித்திருக்கிறாயோ !-வானத்திலே
நிலவே உன் முகம் கானவே ,சன்னல் ஓராக் கம்பிகளானேன்.
குளிருக்கு போத்திய போர்வையும் திரையானது இரவினில்,
சிவந்த கண்கள் சிந்திடும் கண்ணீருக்கு!
உந்தன் மௌனம் பேசிப்போன கவிதை ஒன்று, எந்தன் கனவில் கன்னம் வருடும் இதழ்களானது.
அழகிய மயிலிறகு இதமாய் வருடிச்சென்றது ,
என்னைக் கடந்து செல்லும்போது ,காற்றிலே கலைந்த அவளின் கார்மேகக் கூந்தல்!
காதலுக்கும் கண்ணீருக்கும் உறவொன்று உள்ளதை ,
இன்றுதான் உணர்கிறேன் ,என் உயிரில் மெல்லமாய் .....
கரை தேடும் அலைகள் போல ,உன்னை தினம் தேடுகிறான் ,களைப்பாறும் அலைகளுக்கிங்கே இடமில்லை என்று ,மீண்டும் கடல் சேருகிறான்.
மலர்பூத்த என் விழியில் மலைச்சாரல் தந்ததாரோ?
உனக்காய் காத்திருக்கிறேன் ,
நம் முதல் சந்திப்பில் நீ தந்த சிறு புன்னகையோடு.........

எழுதியவர் : muthulatha (30-Dec-13, 11:22 am)
பார்வை : 163

மேலே