முஜே மாலும் நஹி

ஒரு வெளிநாட்டுகாரன் இந்தியா வந்தான். தாஜ்மகால் பார்த்தான்! அதிசயப்பட்டு போனான். பக்கத்தில் இருந்த ஒரு ஹிந்தி காரனிடம் இதை யார் கட்டியது என்று கேட்டான். ஹிந்தி காரன் எனக்கு தெரியாது என்பதை " முஜே மாலும் நஹி" என்று கூறினான். வெளிநாட்டுகாரன் நினைத்தான் " இந்த முஜே மாலும் நஹி என்பவர் பெரிய ஆள் போல் தெரிகிறது" அடுத்து குத்துப் மினாரை பார்த்தான். இது யார் கட்டியது என்றான். " முஜே மாலும் நஹி". ஒரு இருபது மாடி கட்டிடத்தை பற்றி கேட்டாலும் அதே " முஜே மாலும் நஹி" வெளி..நாட்டுகாரன் நினைத்தான் " முஜே மாலும் நஹி" என்பவர் பெரிய பணக்காரர் போல் தெரிகிறது என்று டயரியில் எழுதினான். ஒரு சவ ஊர்வலம் போனது " யார் இறந்தார்கள் என்று கேட்டான். மீண்டும் " முஜே மாலும் நஹி". அட இவ்வளவு பெரிய ஆள் இறந்த போதும் கூட்டமே இல்லையே என்று ஊர்வலத்தில் கலந்து கொண்டான்.....

எழுதியவர் : முக நூல் (3-Jan-14, 5:40 pm)
சேர்த்தது : nilamagal
பார்வை : 101

சிறந்த நகைச்சுவைகள்

மேலே