வாழ்க்கை
![](https://eluthu.com/images/loading.gif)
சிந்தனை சிறப்பு நீயும்
சிந்திக்காவிட்டால் என்ன பிறப்பு ?
நாய் நரி குணம் எதற்கு
நல்ல மனிதனாய் வாழ பழகு !
ஊர்பகையை வளர்த்து நீயும்
உடம்பை வளர்க்க நினைக்காதே !
பொன்னும் மணியும் எதற்கு
பெண்ணினம் மதிக்கா உனக்கு ?
தாய்மை என்பது சக்தி ! அதை
வாய்மையால் அறிவது முக்தி !
நல்லோர் உறவை நாடு ! அதுவே
எல்லோர் உறவிலும் கூட்டுறவு !
நீயும் நானும் ஓன்று என்று
அறியும் வாழ்வு நன்று !
அன்பாய் இருப்பது அறமே !
அறிந்தால் உலகம் அழகே !
கற்ற கல்வியே சிறப்பு ! அதை
கற்று கொடுக்கவும் பழகு !
சரோ