தமிழன்
பொங்கலும் சித்திரை திங்களும்
விடுமுறை தினமாகி போனதோ
வெள்ளித்திரையும்மதுவும் இன்று
தமிழ் கலாசாரம் என்று அந்தோ
ஏறு தழுவி நடந்த திருமணமோ
இன்று சீரு தழுவியே நடக்கிறதே
பேரு மதிப்பை கொடுத்த திருக்குறளோ இன்று வெறும் மதிப்பெண் மட்டும் கொடுக்கிறதே ?
இலவசம் தேடி இமைகள்
திறந்தும் தூங்குவது ஏனோ ?
தன்னிலை துறந்து மதுவில்
மயங்குவது ஏனோ ?
சுழியம் தந்த தமிழன் இன்னும் சுழியமாகி போகவில்லை.
விண்ணை அளந்த தமிழன் இன்னும் மண்ணை விட்டு செல்லவில்லை.