நட்பாய் வந்த காதல்

உன்னை காணும்
ஒவ்வோர் நொடியும்
பட்டாம்பூச்சி என
படபடக்கும்
என் இதய துடிப்பை
நான் எண்ணும் போதெல்லாம்!

வாய் திறந்து பேசும்
வேளையிலும் உன்
பெயர் மட்டுமே
உச்சரிக்க துடிக்கும்
என் நாவினை கட்டுபடுத்த
இயலாமல் உதடு
கடிக்கும் போதெல்லாம்!

எண்ணிலா நண்பர்கள்
சூழ்ந்துள்ள போதிலும்
உன் விசேஷ குரல்
எங்கு ஒலிபினும்
அங்கு ஓடி வர
என் கால்கள்
துடிக்கும் போதெல்லாம்!

பிறந்த நாள் பரிசுகளில்
பொக்கிஷமாய் பாதுகாக்கும்
உன் கையெழுத்திட்ட
வாழ்த்து அட்டையை
அடிகடி எடுத்து
வாசிக்க நினைக்கும் போதெல்லாம்!

கல்லூரி ஆண்டு விழாவில்
கடைசியாய் வந்து நின்று
அழுத்தமாய் தந்த
கைகுலுக்களை
பல முறை நினைவுகூர்ந்து
அனுபவிக்கும் போதெல்லாம்!

நண்பர்களோடு சென்ற
சுற்றுலாவில்
இருவரும் ஒன்றாய்
கைகோர்த்தபடி
உன் புன்னகை சாரலை
கண்முன் நிறுத்தும்
புகைப்படத்தை
ரசிக்கும் போதெல்லாம்!

நமக்குள் நாமே
அறியாமல்
காதல் மலர்ந்ததை
தெரியாதது போல்
நீ பேசும்
தினங்களில்
கவியெழுதினேன்!
நீயாக நம் காதலை
சொல்வாயென்று!

எழுதியவர் : சௌம்யா தினேஷ் (13-Jan-14, 6:46 pm)
பார்வை : 105

மேலே