நினைவலைகள்

சுமக்கின்றேன் உன் நினைவுகளை
சுமப்பதுதான் வெற்றி என்று
நினைத்திருந்தேன் இந்நாள் வரை
வெற்றிஎன்பது நினைப்பில் இல்லை
தனித்தன்மையான நட்பில் உள்ளதென...

நட்பை நிருபிக்க நம்மால்
இயலுமென முழற்சி செய்தேன்
உணர்ந்தே ன் உடனடியாக நட்பை
ஆழமான தன்மையினால் நடப்பதென்று ...

சோகத்தில் அணைக்கின்ற கைகள்
யாருமறியாமல் அழுகின்ற கண்கள்
தோள்கொடுத்து நாம் அமைதிபெற
உயிரைக் கொடுக்கும் நட்பென்று...

என்றென்றும் உன்முகத்தில் புன்னகை
காட்டிடும் நலஇதயம் கண்டு
நான்மட்டும் ரசிக்க வேண்டும்
என்னைசுற்றிய அழகுதனைக் கொண்டு...

எழுதியவர் : ந தெய்வசிகாமணி (16-Jan-14, 10:20 pm)
Tanglish : ninaivalaigal
பார்வை : 256

மேலே