பழைய சாதம்

பழைய சோறு சாப்பிடுவதே நமக்கு மறந்துவிட்டது. குழந்தைகளுக்க
பழைய சோறு கொடுப்பதையே குற்றமாக கருதும் பெற்றோர்கள்
பெருகிவிட்டனர். ஆனால் பழைய சோற்றில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும்
அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்
முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில்
தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் உடலுக்கு, குறிப்பாக
சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப்
பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம்
உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!
கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய்
எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறதாம்.இதனால் பன்றிக் காய்ச்சல் என்ன,
எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!
காலை சிற்றுண்டியாக பழைய சாதத்தை சாப்பிடுவதால் உடல்
லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.
இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் லட்சக்கணக்கான
நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் அதில் உருவாகின்றன.
மறுநாள் இதை சாப்பிடும் போது உடல் சூட்டைத்
தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும்
குணப்படுத்துகிறது. இதிலிருக்கும் நார்ச்சத்து,மலச்சிக்கல் இல்லாமல்
உடலை சீராக இயங்கச் செய்கிறது.
ரத்த அழுத்தம் கட்டுக்குள்
வந்துவிட்டதோடு கொழுப்பு சத்து குறைந்துள்ளது. உடலுக்கு அதிகமான
சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக
இருக்கிறது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான
சக்தியை தந்து உடலை சோர்வின்றி வைக்க உதவுகிறது. அலர்ஜி,
அரிப்பு போன்றவை கூட சரியாகிவிடுகிறது
. அல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில்
குணமாகிவிடும். எல்லாவற்றுக்கும் மேலாக நோய்
எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் எந்த நோயும் வராமல் உடல்
ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும்.
பழைய சாதம் எப்படி செய்வது:
ஒரு சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, தண்ணீரை நிறைய ஊற்றவும்.
மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து,
சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும

எழுதியவர் : முரளிதரன் (20-Jan-14, 8:06 am)
Tanglish : pazhaiya saadam
பார்வை : 237

சிறந்த கட்டுரைகள்

மேலே