பெண்

கருவறையில் சுமக்கையில் என் அன்னையாய் ....!
மலரும் அகவையில் என் அன்பான தோழியாய் ....!
செல்ல சண்டையில் மென்மையான சகோதரியாய் ...!
அறிவை அளவில்லா கொடுக்கையில் ஆசானாய் ....!
பருவம் வருகையில் அழகாய் என் காதலியாய் ....!
மனம் இணையும் வேளையில் மனதின் மனைவியாய் ...!
கரை தேடும் கனவில் என் ஒளியாய் .....!
மனித இனம் மலர மகிமையாய் ....!
ஓருயிர் ....! எத்துனை முகங்கள் ....! என் கண்ணில் விளியாகிறாய் ...! என்னுயிர் பெண்ணே ...!
உம்முடன் வாழ்கிறேன் ...! உன்னருகில் ...! உன் பணி செய்ய ...!

எழுதியவர் : பழனிவேல் மனோ (21-Jan-14, 9:41 am)
Tanglish : pen
பார்வை : 205

மேலே