கிடங்கு
முதலாளி : ஏண்டா? ரெண்டு நாளா வேலைக்கும் வராம, ஒரு தகவலும் சொல்லாம எங்கடா போன..?
பையன் : அது ஒண்ணுமில்ல முதலாளி..எங்க தாத்தா,ரெண்டு நாளுக்கு முன்னாடி தெருவுல நடந்து போகும்போது, திறந்து கிடந்த சாக்கடைக் கிடங்குல விழுந்துட்டாரு..
முதலாளி : அப்படியா...? அடப்பாவமே..... சரி, இப்போ எப்படி இருக்குறாரு?
பையன் : ரெண்டு நாளா இருந்ததவிட, இன்னைக்கி கொஞ்சம் பரவாயில்லை முதலாளி. கிடங்குல இருந்து சத்தம் வர்றது நின்றுச்சு..!