அழகு

கட்டுகட்டா தலையில வச்சிக்கிட்டு ..
தாழம்பூ மணக்கும் பாதியில் நடந்துகிட்டு ...
அன்னம் நடை நடந்து போறவளே...
உன் அழகை பாடப்போறேன் கேளு புள்ள ...
பெட்டை கோழி குஞ்சுகளை காத்து கொள்ள எதிர்த்து நிற்கும் எதிரிகளை போர் வீரனை போல ..
அதை உள்ளுக்குள் வைத்து கொண்டு நடக்கின்றாய் உன் அழகை என்னவென்று சொல்ல ...
காட்டு மயில் சத்தம் கேட்க்கும் போது மேகம் சிலிர்த்திடும் மெல்ல ..
நீ நெல் கட்டு தூக்கி செல்லும் அழகை கண்டால் என் உயிர் அலறுது மெல்ல...
நடனம் ஆடிக்கொண்டு நடக்கிறாய் மைல்களை போல ...
கொஞ்சும் கிளிகள் சத்தம் நிற்குது உன் கால் கொலுசின் ஓசையை கேட்க்க ...
பாதையில் முள் இருக்கு பார்த்து செல்லடி ..
உன் பஞ்சு போன்ற பாதம் வலி எடுத்தால் என் இதயத்தில் ரத்தம் வழியுமடி ...
பார்த்து செல் என்று சொல்லும் முன் வேர்த்து கொட்டுது ..
நீ பாதையில் வருவதை கண்டதும் முள் ஒதுங்கி செல்லுது ...
பருத்தி காட்டில் பாம்பு இருக்கும் பயப்படாதே ..
பக்கத்தில் துணையாய் நான் வருவேன் என்னை துரத்திவிடாதெ ...
தூரத்தில் இருக்கு உன் வீடு துணையாய் வரட்டுமா உன் விறு விறு நடையில் விமானத்தின் வேகம் வேண்டுமா ...
சுற்றி முற்றி பார்த்து விட்டேன் சுதந்திர காற்று ..
சுந்தரியே நீ மூச்சுவிட்டால் அடிக்குது மயில் தோகை காற்று ..
பச்சிளம் குழந்தையைப்போல் சிரித்த முகம் ..
அதனால் இல்லை இரவினில் உறக்கம் ...
வீடு வரை வந்து விட்டேன் விளக்கம் வேண்டுமா ..
நீ வேண்டாம் என்று விரட்டி விட்டால் என் இதயம் தாங்குமா..
ஒற்றை கண்ணில் என்னை கொஞ்சம் பாரடி .
உச்சி மலையில் இருந்து வீழ்ந்தாலும் என் இதயம் உன் பெயரை சொல்லுமடி...