எங்கே நிம்மதி
எங்கே அது?
தேடுகிறேன் தேடுகிறேன்
ம்ஹூம்...கிடைக்கவில்லை.
பணமுண்டு பொருளுண்டு
சுற்றார் உறவுண்டு - ஏன்
அது கிடைக்கவில்லை!
தேடுகிறேன் இன்னும் தேடுகிறேன்
தொலைந்ததைத் தேடுகிறேன் - ம்ஹும்
யாருமதைச் சொல்லவில்லை!
பாமரனிடம் கேட்டுவிட்டேன்
செல்வந்தனிடமும் கேட்டுவிட்டேன்
அவர் வசமும் அது இல்லை!
கண்டவரும் சொல்லவில்லை
எடுத்தவரும் சொல்லவில்லை - தவிக்கிறேன்
அது இல்லாமல்!
ஏழை வசம் அது இல்லை
தனவந்தர் வசம் அது இல்லை - ஏன்
நாடாளும் அரசனிடமே அது இல்லை!
எங்கு நான் தேடுவேன்? - நான்
யாரிடம் அதைப் பெறுவேன்
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!