பழிதீர்த்தம்

நாட்டுக்கொரு இழிவென்று
பகை நாட்டை தாக்க
சென்றாலும் வருவோமே
உங்களோடு நாங்கள்!

நன்னெறி நடந்த முன்னோர்களை
புண்வசை பாடுவோர்க்கு எதிராகவே
பகைக்கொடி ஏந்துவோமே
உங்களோடு நாங்கள்!

இதுவெல்லாம் பகையல்ல
இன்னும் உண்டு இதுபோல
தமிழனை தமிழனாய்
பறைசாற்றும் வீரம்!

ஆனால்...

மதியிழந்த மானிடப் பதர்களே!
திட்டி விட்டான் என்னை
கேவலமாய் என்றே
வெட்டி விடத் துடிக்கும்
பகைமையை என் சொல்ல!

உயிர் பிரியும் இறுதி நேரங்கூட
உயிலோடு உயிலாக
எழுதிச் செல்லும்
பழி வாங்கும் ஈனமான
பகைமையை என் சொல்ல!

இரண்டடி நிலத்திற்க்காய்
சண்டையிட்டு
இழிந்து இறக்கும்
மடையர்களின் ஈனப்
பகைமையை என் சொல்ல!

பக்தியாய் பருகிடும்
தீர்த்தமாய் எண்ணியே,
பழிவாங்கத் துடிக்கும்
பகைமையை என் சொல்ல!

எழுதியவர் : உமர்ஷெரிப் (1-Feb-14, 12:15 pm)
சேர்த்தது : உமர்
பார்வை : 605

மேலே