பெண்

பெண்
என்னை நோக்கி வீசி எறிந்த
ஒவ்வொரு வரதட்சணை அணுகுண்டும்
என்னை முன்னேற்றிய ஏணிப்படிகள்!
தாயாய் தாலாட்டிய புத்தகங்கள்
பாலைவனத்தில் உருவாகிய சோலைவனம்!
கடவுளிடம் மட்டுமே பேசிய வரிகள்
சத்தியமான உண்மைகள்!
நெஞ்சத்தில் மறைந்த
நெருஞ்சி முட்களை எடுத்துவிட
எந்த மருந்தைத் தேடுவது?
நடந்தவை நடந்தவையாக
நடக்க இருப்பவை நல்லவையாக
நாளைய பொழுது நல்லவையாக
இருக்கும் என்ற எதிர்பார்ப்பில்
வாழ்ந்து கொண்டிருக்கும்
உலகப் பார்வைக்கு
வாழ்ந்து கொண்டிருக்கும்
நெகிழி இயந்திரம்.

எழுதியவர் : முனைவர்இலட்சுமி (1-Feb-14, 2:59 pm)
சேர்த்தது : vaira31mani
Tanglish : pen
பார்வை : 62

மேலே